ஆப்நகரம்

இங்க ரெண்டு கட்சிக்கு தான் வேலை .... நீங்க ஓரமா போய் விளையாடுங்க... கமலை கலாய்த்த அமைச்சர்!

தமிழக அரசியலில் அதிமுக, திமுக இரு கட்சிகளை தான் மக்கள் அங்கீகரித்துள்ளனர். இங்கு கமல்ஹாசன் போன்றவர்களுக்கு இடமில்லை என பொருள்படும்படி அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Sep 2019, 1:18 am
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அத்துடன் இடைத்தேர்தல் என்பது ஒரு ஊழல் நாடகம் எனவும் அவர் விமர்ச்சித்திருந்தார்.
Samayam Tamil mkr.


கமலின இந்த விமர்சனத்துக்கு, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியது:

கமஸ்ஹாசன் ஆழம் தெரியாமல் அரசியலில் இறங்கிவிட்டார். இப்போது வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அவர் கட்சியை ஆரம்பித்தார், தேர்தலை கண்டார், அரசியலில் தாம் யார் என்பதை உணர்ந்தார்.

அவரது திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது தான் ஊழல். ஊழலைப் பற்றி பேச அவருக்கு எவ்வித தகுதியும் இல்லை.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக அதிமுகவையும், எதிர்க்கட்சியாக திமுகவையும் மட்டும் தான் மக்களள் அங்கீகரித்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படுவது குறித்து கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டாலும், கூட்டணி கட்சிகள் போட்டியிட்டாலும் இடைத்தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அடுத்த செய்தி