ஆப்நகரம்

இந்த காரணத்துக்காகத் தான் வீடியோ வெளியிட்டோம்; சி.ஆர் சரஸ்வதி.!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும், ஜெயலலிதா மரணம் குறித்து, தொடர்ந்து பேசி வந்ததாலேயே உண்மையை உணர்த்தும் வகையில் வீடியோவை வெளியிட்டதாக, சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

TNN 20 Dec 2017, 1:01 pm
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும், ஜெயலலிதா மரணம் குறித்து, தொடர்ந்து பேசி வந்ததாலேயே உண்மையை உணர்த்தும் வகையில் வீடியோவை வெளியிட்டதாக, சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil c r saraswathi talks about jayalalitha treatment video
இந்த காரணத்துக்காகத் தான் வீடியோ வெளியிட்டோம்; சி.ஆர் சரஸ்வதி.!


நாளை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் மறைந்த முதல்வர், ஜெயலலிதா, அப்பலோவில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலின் தற்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ காட்சிகள் பல்வேறு அரசியல் தலைவர்களும் கேள்வியெழுப்பி வரும் நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவாளரான , சி.ஆர். சரஸ்வதி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பன பின்வருமாறு;



ஓராண்டுக்கு முன்னரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும் இதே சர்ச்சை தான் எழுந்திருக்கும். சசிகலா பற்றி பலரும் அவதூறாக பேசிய போதே இந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அப்போது அவர் மறுத்துவிட்டார், யாரிடமும் ஜெயலிலதாவை இந்த கோலத்தில் காட்ட விரும்பவில்லை என்று சசிகலா கூறி இருந்தார். விசாரணைக் கமிஷனிடம் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சியினர், ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களையே மக்கள் மத்தியில் விதைத்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையான வீடியோ, இதை நாங்கள் நீதிமன்றத்திலும் கொடுக்கக் கூட தயாராக உள்ளோம் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கருத்து வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி