ஆப்நகரம்

CAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன? - சபையில் போட்டுடைத்த முதல்வர்

சிஏஏவுக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தில் யாரும் இறக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Feb 2020, 11:40 pm
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் போராட்டம் தூண்டிவிடப்பட்டிருப்பதாக, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
Samayam Tamil CAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்


சிஏஏவுக்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் தொடங்கிய நாளான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு, அங்கு போலீஸார் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த திருமணம்!

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது இவ்விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியது:

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல் துறையின் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுமார் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CAA: போராட்டக்காரங்கள பத்தி பொய்ப் பிரசாரம் செய்றாங்க... அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்ய முயன்றபோது, அவர்கள் மீது கற்கள் உள்ளிட்டவை வீசப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக, சில விஷமிகள் வதந்தி பரப்பி, தமிழகம் முழுவதும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர். ஆனால் அந்த முதியவர் உண்மையில் நோயின் காரணமாகவே இறந்துள்ளார் என முதல்வர் விளக்கம் அளித்தார்.

சிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்?

முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அடுத்த செய்தி