தமிழகத்தில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதில் எதிர்க்கட்சிகள் இதுவரை செய்திராத சாதனையை திமுக செய்துள்ளது.
தெற்கு, மத்திய மாவட்டங்களில் திமுகவும், மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?- இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்!
அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பல்வேறு விதங்களில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு நன்றி தெரிவித்து வெற்றி பெற்றவர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
சிலர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருக்கின்றனர். தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தான் தேர்தலில் செலவு செய்த ஒட்டுமொத்த கணக்கை போஸ்டராக ஒட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2019 ஓர் அலசல் - புள்ளி விவரங்களுடன் முழு விவரம்!
அந்த வகையில் தன்னிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டீர்களா என்று தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், “ காசு வாங்கிய நாயே ஓட்டு போட்டாயா” என்று கேள்வி கேட்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
அதில் தனது பெயரை அவர் குறிப்பிடவில்லை. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி ஓட்டிற்கு பணம் கொடுப்பது குற்றம்.
திடீரென இப்படியொரு மவுசு; சுயேட்சைகளை தேடி ஓடும் அதிமுக, திமுக- ஏன் தெரியுமா!
இந்த சூழலில் ஓட்டிற்கு பணம் கொடுத்ததாக வேட்பாளர் ஒருவர் போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோட்டூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு, மத்திய மாவட்டங்களில் திமுகவும், மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?- இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்!
அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பல்வேறு விதங்களில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு நன்றி தெரிவித்து வெற்றி பெற்றவர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
சிலர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருக்கின்றனர். தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தான் தேர்தலில் செலவு செய்த ஒட்டுமொத்த கணக்கை போஸ்டராக ஒட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2019 ஓர் அலசல் - புள்ளி விவரங்களுடன் முழு விவரம்!
அந்த வகையில் தன்னிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டீர்களா என்று தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், “ காசு வாங்கிய நாயே ஓட்டு போட்டாயா” என்று கேள்வி கேட்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
அதில் தனது பெயரை அவர் குறிப்பிடவில்லை. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி ஓட்டிற்கு பணம் கொடுப்பது குற்றம்.
திடீரென இப்படியொரு மவுசு; சுயேட்சைகளை தேடி ஓடும் அதிமுக, திமுக- ஏன் தெரியுமா!
இந்த சூழலில் ஓட்டிற்கு பணம் கொடுத்ததாக வேட்பாளர் ஒருவர் போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோட்டூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.