ஆப்நகரம்

ஜெ., உடல் வைக்கப்படவுள்ள பீரங்கி வண்டி அனுப்பி வைப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படவுள்ள பீரங்கி வண்டியை மத்திய அரசு சென்னை அனுப்பி வைத்துள்ளது.

TNN 6 Dec 2016, 3:20 pm
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படவுள்ள பீரங்கி வண்டியை மத்திய அரசு சென்னை அனுப்பி வைத்துள்ளது.
Samayam Tamil cannon cart being sent by defence to keep ammas body for funeral procession
ஜெ., உடல் வைக்கப்படவுள்ள பீரங்கி வண்டி அனுப்பி வைப்பு


முதல்வரின் உடல் வைக்கப்பட உள்ள பீரங்கி வண்டியை தனி விமானம் மூலம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சென்னை அனுப்பி வைத்துள்ளது. வண்டி சென்னையை அடைந்ததும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் ஜெயலலிதாவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வரின் உயிர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் (டிச.5-ம் தேதி) பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்பின்னர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அலைகடலென திரண்ட பொதுமக்கள், நீண்ட வாரிசையில் நின்று ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு அருகில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல் மாலை 4.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

அடுத்த செய்தி