ஆப்நகரம்

விவசாயிகள் கடன் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி!

விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்கில் ஒட்டுமொத்தமாக கடன் தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Sep 2019, 2:16 pm
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற 2.5 முதல் 5 ஏக்கர் நிலம் வரை உள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
Samayam Tamil SC


இதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு விசாரித்தது. அப்போது ஆஜரான விவசாயிகள் சங்கம் தரப்பு, அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிப்படைந்து இருக்கின்றனர்.

இந்தியை ஏற்கமாட்டார்கள்: பொதுமொழி தேவைதான் : புதுமொழி கேட்கிறாரா ரஜினி

10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே அனைத்து விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளின் பங்களிப்பும் சமமே.

ஒட்டுமொத்தமாக விவசாயக் கடன் தள்ளுபடி என்பது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து ஆஜரான தமிழக அரசு தரப்பு, விவசாய கடனை உயர் நீதிமன்றம் எப்படி தள்ளுபடி செய்து உத்தரவிட முடியும்? இது அரசின் கொள்கை முடிவு.

பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: ரூ. 6,078 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!

இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்தே, சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5,780 கோடி அரசுக்கு செலவு ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

இதைக் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதா? அதற்கான சாத்தியம் இருக்கிறதா? என்பதை அறிக்கையாக சமர்பிக்க தமிழக அரசுக்கு அறுவுறுத்தினர்.

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்; இதுதான் ரஜினி!!

அதேசமயம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். இந்நிலையில் வழக்கு மீதான விசாரணை, வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி