ஆப்நகரம்

பாஜகவினரைப் போல் பொத்தாம் பொதுவாக பேச முடியாது; அதுக்குத் தான் இப்படி - ஸ்டாலின் விளக்கம்!

தான் ஏன் துண்டு சீட்டுடன் பேசுகிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 20 Aug 2019, 4:22 pm
தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக டீ, காபி விலையும் உயர்த்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
Samayam Tamil MK Stalin


இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஒன்றல்ல. மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் வார்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

Also Read: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - துர்கா தம்பதிக்கு இன்று 44வது திருமண நாள்- குவியும் வாழ்த்து மழை!

இவர்கள் மக்கள் வயிற்றில் பாலினால் அடித்திருக்கிறார்கள். இது சரியான நடவடிக்கை அல்ல. பால் உற்பத்தியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி ஆகும். ஆளும் தரப்பினர் மாறி, மாறி கருத்துகளை கூறி வருகின்றனர்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளம் நல்ல லாபத்தில் இயங்கி வருவதாக கூறுகிறார். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், அதன் காரணமாகத் தான் பால் விலை உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இந்த பிரச்சனையை சும்மா விட மாட்டோம்- டெல்லியில் வரும் 22ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

இதில் எதை நம்புவது? தமிழகத்தில் மாவட்டங்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல், லஞ்சம் உள்ளிட்டவற்றை மறைக்க செய்யும் ஏற்பாடுகள் தான் எனத் தோன்றுகிறது.

தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்று பொதுவாக பேசிவிட்டு என்னால் போக முடியாது. எதையும் ஆதாரங்கள் உடன் பேச வேண்டும். எனவே தான் துண்டு சீட்டுடன் பேசுகிறேன் என்று கூறினார்.

Also Read: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்!

அடுத்த செய்தி