ஆப்நகரம்

தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்!

கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு அப்புறப்படுத்திய போலீசார்.

Samayam Tamil 3 Dec 2018, 10:35 pm
திருச்சி அருகே கார் டயர் பஞ்சராகி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன்-மனைவி படுகாயமடைந்தனர்.
Samayam Tamil accident


திருச்சி காட்டூரைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் மற்றும் அவரது மனைவி புவனிகா. இவர்கள் இருவரும் ஒரு காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த போது துவரங்குறிச்சி கல்லாமேடு அருகே டயர் பஞ்சரானதால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் காயமடைந்தனர். எடுத்து காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த காரை பொதுமக்கள் உதவியுடன் தூக்கி ஓரமாக வைத்தனர்.

அடுத்த செய்தி