ஆப்நகரம்

பந்தல்குடி புறவழிச்சாலையில் லாரி மீது டாடாசுமோ கார் மோதி விபத்து!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் (தூத்துக்குடி மாவட்டம் எல்லை) அழகாபுரி விலக்கில் லாரி மீது டாடாசுமோ கார் மோதிய விபத்து. இதில் ஒருவர் உயிரழந்தார், 5 பேர் படுகாயமடைந்தார்.

Samayam Tamil 7 Mar 2019, 10:17 pm
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் (தூத்துக்குடி மாவட்டம் எல்லை) அழகாபுரி விலக்கில் லாரி மீது டாடாசுமோ கார் மோதிய விபத்து. இதில் ஒருவர் உயிரழந்தார், 5 பேர் படுகாயமடைந்தார்.
Samayam Tamil Raod accident


தூத்துக்குடி புதிய துறைமுகம் லேபர் கலணியை சேர்ந்த இருளாண்டி. இவர் கட்டிட மேஸ்திரிய பணிசெய்து வருகிறார். இருளாண்டி சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டிற்காக மதுரை மாவட்டம் அழகர் கோவிலுக்கு தனது மனைவி மகன் மற்றும் குடும்பத்துடன் தனது சொந்த டாடா சுமோவில் இன்று அதிகாலை புறப்பட்டு குழ தெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து இன்று பிற்பகல் சொந்த ஊர் தூத்துக்குடிக்கு புறப்பட்டுள்ளனர்.

கார் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழச் சாலை வழியாக செல்லும் தூத்துக்குடி மாவட்டம் எல்லை அழகாபுரி விலக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராமல் முன்னால் சென்ற லாரி மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் முன் பக்கம் முழுதும் பயங்கர சேதமானது. இதில் இருளாண்டி சம்பவ இடத்திலே உயிரழந்தார்.
மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை கண்ட சக பயணிகள் காயம் பட்டவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த மாசார் பட்டி காவல்துறையினர் உயிரழந்த இருளாண்டி உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து மாசார் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி