பிரேக் அடிச்சும் நிக்காம பள்ளி பேருந்து மீது மோதிய கார்... பதைபதைக்கும் வீடியோ..!
திண்டுக்கல் மாவட்டம் காக்கா தோப்பில் பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil 27 Jan 2020, 8:25 pm
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித்லால் என்பவர் ஓட்டுனருடன் காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் காக்காத்தோப்பு நான்கு வழிசாலையில் அதிவேகமாக வந்துகொண்டிருக்க, எதிர் திசையில் வந்த பள்ளி பேருந்து ஒன்று சாலையை கடக்க முயற்சித்தது. இந்த நிலையில் பேருந்தை கண்டதும் காரை நிறுத்த ஓட்டுநர் முயற்சித்தும் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், பள்ளி பேருந்து மீது பலமாக மோதி நின்றது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி மிகுந்த சேதமான நிலையில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். பேருந்து சற்று தள்ளாடி நின்றது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்.
இந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்!
பின்னர் தகவல் அறிந்து வந்த காக்காத்தோப்பு போலீசார் விபத்தில் காயமடைந்த சுஜித்லால் மற்றும் அவரது ஓட்டுனரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி மிகுந்த சேதமான நிலையில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். பேருந்து சற்று தள்ளாடி நின்றது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்.
இந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்!
பின்னர் தகவல் அறிந்து வந்த காக்காத்தோப்பு போலீசார் விபத்தில் காயமடைந்த சுஜித்லால் மற்றும் அவரது ஓட்டுனரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.