ஆப்நகரம்

கோவில்பட்டி: வேன் மீது கார் மோதல், 5 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் எதிரே வந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

TNN 25 Dec 2017, 5:36 pm
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் எதிரே வந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil car hits van near kovilpatti 5 dead
கோவில்பட்டி: வேன் மீது கார் மோதல், 5 பேர் பலி


கன்னியாகுமாரிலிருந்து மதுரை செல்லும் நெஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிக வேகத்தில் கார் இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த காரின் முன்பக்க டையர் வெடித்ததால் கட்டுப்பாடு இழந்து கார் எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் , காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் இருந்த 3 பேர் காயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு காவல்துறையினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அடுத்த செய்தி