ஆப்நகரம்

ஹேண்ட் பிரேக்கை போட மறந்த டிரைவர்! திருத்தணி மலை மீது நிறுத்தப்பட்டிருந்த கார் உருண்டோடியது!!

திருத்தணி மலையில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் உருண்டோடி மலை இடுக்கில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Sep 2018, 5:22 pm
திருத்தணி கோவிலுக்கு வந்தவர் மலை மீதுள்ள பார்கிங்கில் காரை நிறுத்தி விட்டு ஹேண்ட் பிரேக் போட மறந்ததால், கார் உருண்டோடி மலை இடுக்கில் விழுந்தது.
Samayam Tamil tiruttani


ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர் தனது உறவினர்களுடன் திருத்தணி மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு காரில் வந்துள்ளார். மலை மீது வரும் கார்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி உள்ளது. விஜயகுமார் அங்கு சென்று தனது காரை நிறுத்தி வைத்தார். ஆனால், மறதியில் காரின் ஹேண்ட் பிரேக்கை போடாமல் இறங்கி கோவிலுக்குள் சென்று விட்டார்.

அப்போது, மலை சரிவு என்பதாலும், ஹேண்ட் பிரேக் போடாததாலும், கார் மெல்ல நகர்ந்தது. ஒரு கட்டத்தில் காரின் வேகம் அதிகரிக்க, மலைச்சருக்கில் உருண்டு சென்றது. பின்னர், உருண்டோடி மலை இடுக்கில் சென்று விழுந்தது. இந்த சம்பவத்தால் யாருக்கும் காயமடையவில்லை.
கோவிலில் தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்த விஜயகுமார், கார் உருண்டோடி விழுந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது. மலை மீது நிறுத்தப்பட்டிருந்த கார் உருண்டோடி விபத்துக்குள்ளான சம்பவம், திருத்தணி கோவிலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி