ஆப்நகரம்

இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்க தொடரப்பட்ட வழக்கு!

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 2 Feb 2021, 11:56 am
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்கள் பயன்பெறுகின்றனர்.
Samayam Tamil tn reservation


மேலும் இதன்மூலம் தமிழ்நாடு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னணியில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மருத்துவ மாணவி கயாத்ரி உட்பட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சசிகலாவை ஜெயலலிதா முன்னால் விமர்சித்த கே.பி.முனுசாமி: ஒரு பிளாஷ் பேக்!
“இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. ஆனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த இட ஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க வேண்டும். அல்லது ஏற்கனவே மராத்தா இட ஒதுக்கீடு வழக்கோடு இணைத்து அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

சசிகலாவை வரவேற்க ஓபிஎஸ் வருவார்? டிடிவி தினகரன் சொல்வது இதுதான்!

இதனைனைத் தொடர்ந்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி