ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பழைய முறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது

Samayam Tamil 15 Oct 2019, 7:27 pm
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil high court madurai


தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2ஏ (நேர்கானல் மற்றும் நேர்காணல் அல்லாத) தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் ஒரே தேர்வாக நடத்தப்படும். நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வுகள் முதனிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக இருக்கும்.

தமிழை புறக்கணிக்கவில்லை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் திட்டவட்டம்

குரூப் 2 தேர்வின் முதனிலை தேர்வில் எதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவற்றில் 100 வினாக்களும் கேட்க்கப்பட்டன. அவை தற்போது நீக்கப்பட்டு, தமிழக அரசியல் வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்ட பாடப்பகுதிகளுடன் கூடிய 175 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி வினாக்களும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

தமிழுக்கும் தமிழகத்துக்கும் முக்கியத்துவம்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்

இதையடுத்து, குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும், தமிழுக்கும் தமிழகத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

Group 2 New Syllabus: குரூப் 2 புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம்? TNPSC திடீர் ஆலோசனைக் கூட்டம்!

இதனிடையே, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வில் 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி