ஆப்நகரம்

“ஒரு மாதத்தில் லட்சம் பேர் மீது வழக்கு, எப்ஐஆர் போடவே 3 வருஷம் ஆகுமே”தமீம் முன் அன்சாரி!

கடந்த ஒரு மாதத்தில் சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து எம்எல்ஏ தமீம் முன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Feb 2020, 11:34 am
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று அதன் ஒருகட்டமாகச் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.
Samayam Tamil CAAProtest-India


இந்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தடையை மீறி போராட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் தங்கள் பலத்தை மட்டும் காண்பிக்கும் வகையில் கூடி நின்று தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அதிகாரப் பூர்வமாக அரசு வழங்கும் தகவலின்படி சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற 11 ஆயிரத்து 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போராட்டம்: கண்ணியமாக மிரட்டல் விடும் இஸ்லாமியர்கள், வியந்து பார்க்கும் போலீஸ்!

தமிழ்நாட்டில் இப்படிக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனக் கேள்விகள் எழுந்தபோதுதான் 20 ஆயிரம் போராட்டக்காரர்கள் மீது வழக்கு என்ற செய்தி வெளியானது.


இந்த வழக்குப் பதிவு குறித்து பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் தமீம் முன் அன்சாரி கூறியதாவது:
இந்த ஒரு மாதத்தில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என லட்சத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்வதற்கே 3 ஆண்டுகள் ஆகும். அப்படியிருக்க அரசு இதை ஏன் செய்கிறது எனத் தெரியவில்லை.

தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ள எம்எல்ஏ...தமிழை ஓரங்கட்டும் மத்திய அரசு... இன்னும் பல முக்கியச் செய்திகள்

அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயப்படப் போவதில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி