ஆப்நகரம்

அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

Samayam Tamil 21 Jan 2022, 4:47 pm
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
Samayam Tamil கோப்பு


ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார அணி வகுப்பு ஊர்திகளில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பை, மத்திய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்து விட்டது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி, சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாபு என்பவர் சார்பில், பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு ஆஜரான வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் என்பவர், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வாகனங்களை இடம் பெற உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். இது தொடர்பாக முறையாக மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், வழக்கை திங்கட்கிழமை விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

அடுத்த செய்தி