ஆப்நகரம்

காற்று மாசுப்பாட்டை ஏன் கட்டுப்படுத்தல? ... தமிழக அரசின் மீது வழக்கு !!

சென்னை மாநகரில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த தவறியதாக, தமிழக அரசின் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Nov 2019, 6:06 pm
சென்னை மாநகரில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil tgn


இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனுவில், " சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாட்டினால், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

சென்னை மாநகரின் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை தவறிவிட்டன.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

நம்புங்க இது டில்லி இல்லை, சென்னை தான்: அப்புறம் உங்க முகமூடியை மறந்துடாதீங்க!

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு சூழ்ந்துள்ளது. புகை மூட்டம் போல பார்க்கும் திசையெங்கும் தூசி பரவியுள்ளது. இயல்பாக சுவாசிக்கும் காற்றின் தரக்குறியீடு எண் 50. ஆனால், சென்னை மணலியில் அதிகபட்சமாக 320, வேளச்சேரியில் 292, ஆலந்தூரில் 280 ஆக காற்றின் தரக்குறியீடு எண் உள்ளது.

காற்று மாசுபாட்டால் ஆஸ்துமா உள்ளிட்ட உடல் நல பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாலை, அதிகாலை நேரங்களில் இத்தகைய மாசு கலந்து காற்று அதிகமாக இருப்பதால் முகமூடி (மாஸ்க்) அணிந்து செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நிலவும் காற்று மாசுப்பாட்டுக்கும், சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மழைப் பொழிந்தால் இந்த காற்று மாசு குறைந்துவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி