ஆப்நகரம்

ஓபிஎஸ் மகன் எம்.பி பதவிக்கு சிக்கல்; தேனி தொகுதியில் பெற்ற வெற்றிக்கு எதிராக வழக்கு!

தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார் வெற்றிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jul 2019, 11:19 am
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இருப்பினும் தேனி மக்களவை தொகுதியில் மட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திராத் குமார் வெற்றி பெற்றார்.
Samayam Tamil OPS Son


தனது மகனுக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்று ஓபிஎஸ் தீவிரமாக செயல்பட்டுள்ளார். ஆனால் எம்.பி பதவி மட்டும் தான் வசப்பட்டது. தமிழகத்தில் இருந்து யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் எம்.பி பதவிக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

அதில், தேனி தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெற்ற போது, வாக்குகளைப் பெற மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர்.

தேனி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த செய்தி