ஆப்நகரம்

2021 தேர்தலில் போட்டியிடுவதில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Feb 2020, 6:45 pm
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், கடந்த 2011 -2016 ஆம் ஆண்டு வரை, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி.
Samayam Tamil sb.


2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தபோது, தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமமுகவில் இணைந்தார். அங்கு சிறிது காலம் தள்ளிய செந்தில் பாலாஜி பின்னர் திமுகவில் ஐக்கியம் ஆனார்.

செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸார் சோதனை!

தற்போது அவரக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக உள்ள இவர், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது இவ்வழக்கு, முன்னாள் மற்றும் இன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தில் பாலாஜி வீட்டிற்கு சீல்: ஆதரவாளர்கள் போராட்டம்!

சென்னை பூந்தமல்லியில் உள்ள இந்த நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்குகள் ஆறு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதால், செந்தில் பாலாஜி மீதான முறைகேடு புகார், வழக்கு விசாரணையில் நிரூபணமாகும் பட்சத்தில், அவர் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும்.

அடுத்த செய்தி