ஆப்நகரம்

மதிப்பெண் வழங்க லஞ்சம் வாங்கிய அண்ணா பல்கலை. போராசிரியை!

கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் போரிசிரியை உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Aug 2018, 10:10 pm
கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் போரிசிரியை உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil anna university.


கடந்த 2017ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பருவத்தேர்வின் போது, மறுமதிப்பீட்டில் மதிப்பெண் வழங்க பேராசிரியர்கள் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில், மதிப்பெண்ணுக்காக மாணவர்களிடம் இருந்து 10 ஆயிரம் வரையில் லஞ்சம் பெற்றதாக தேர்வுக்கட்டுபாட்டு அதிகாரி உமா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்னர். உமா தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இன்று பேராசிரியை உமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, தேர்வு விடைத்தால் திருத்திய 7 ஆசிரியர்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி