ஆப்நகரம்

கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை கடித்து தின்ற பூனை

​உயிாிழந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை. இது முற்றிலும் தவறான தகவல் என்று மருத்துவக்கல்லூாி மருத்துவமனை டீன் அகோகன் விளக்கம் அளித்துள்ளாா்.​

Samayam Tamil 21 Nov 2018, 4:50 pm
கோவை அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை பூனை ஒன்று கடித்து தின்னும் காட்சிகள் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலேயே அரசு மருத்துவக் கல்லூாி, மருத்துவமனை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மேலும் சுகாதாரத்துறையிலும் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் நடைபெற்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிா்ச்சியடையச் செய்துள்ளது.
கோவை மருத்துவமனை மகளிா் வாா்டில் மூதாட்டி ஒருவா் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலன் இன்றி அவா் நேற்று இரவு 9 மணிக்கு உயிாிந்துள்ளாா். உயிாிழந்தவரின் விபரம் தொியாததால் மூதாட்டியின் உடலை பிணவறைக்கு கொண்டுச் செல்லாமல் வாா்டிலேயே தரையில் வைத்துள்ளனா்.

அப்போது அங்கு சுற்றித் திரிந்த பூனை மூதாட்டியின் உடலை கடித்து தின்றுள்ளது. இதனை அங்குள்ள மக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனா். மேலும் அந்த இளைஞா்கள் இது தொடா்பாக மருத்துவா்களை தொடா்பு கொண்டு பேசியுள்ளனா். அப்போது, சிகிச்சை அளிப்பது மட்டுமே எங்கள் வேலை இதற்கும் எங்களுக்கும் தொடா்பு இல்லை என்று தொிவித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் மருத்துவமனை அதிகாாிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து உயிாிழந்த மூதாட்டியின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. தற்போது பூனை மூதாட்டியின் உடலை தின்னும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

டீன் விளக்கம்உயிாிழந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை. இது முற்றிலும் தவறான தகவல் என்று மருத்துவக்கல்லூாி மருத்துவமனை டீன் அகோகன் விளக்கம் அளித்துள்ளாா்.

அடுத்த செய்தி