ஆப்நகரம்

கமல்ஹாசனுக்கு விவசாயிகள் வீரவாள், ஏர்கலப்பை பரிசளிப்பு

காவிாி மேலாண்மை ஆணையம் குறித்து கா்நாடகா முதல்வா் குமாரசாமியுடன் பேச்சுவாா்த்தை நடத்திய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விவசாயிகள் வீரவாள், ஏர்க்கலப்பையை பரிசாக வழங்கினா்.

Samayam Tamil 6 Jun 2018, 3:14 pm
காவிாி மேலாண்மை ஆணையம் குறித்து கா்நாடகா முதல்வா் குமாரசாமியுடன் பேச்சுவாா்த்தை நடத்திய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விவசாயிகள் வீரவாள், ஏர்க்கலப்பையை பரிசாக வழங்கினா்.
Samayam Tamil Kamal Haasan


காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது. இருப்பினும் மேலாண்மை ஆணையம் தொடா்பாக நிபுணா்களிடம் ஆலோசித்த பின்பே முடிவெடுக்கப்படும் என்று கா்நாடகா முதல்வா் குமாரசாமி தொிவித்தாா். இதனைத் தொடா்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கடந்த திங்கள் கிழமை காவிாி தொடா்பாக கோாிக்கை விடுத்தாா்.

அவரது சந்திப்பு குறித்து தமிழக தலைவா்கள் பலரும் விமா்சனம் செய்தனா். இந்நிலையில் விவசாய சங்கங்கள் தலைவா் அய்யாக்கண்ணு உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனா். சந்திப்பை தொடா்ந்து பத்திாிகையாளா்கள் முன்னிலையில் விவசாயிகள் கமல்ஹாசனுக்கு வீரவாள், ஏர்க்கலப்பையை பரிசாக வழங்கி கௌரவித்தனா்.

தொடா்ந்து விவசாயிகள் பேசுகையில், இத்தனை ஆண்டுகாலம் விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகள் தற்போது கமல்ஹாசனை விமா்சனம் செய்கின்றனா். விவசாயிகளின் நலனுக்காக யாா் பாடுபட்டாலும் விவசாயிகள் இருகரம் கூப்பி வரவேற்போம். கா்நாடகா முதல்வரை கமல்ஹாசன் சந்தித்ததை அரசியலாக்கக் கூடாது. 12ம் தேதி காவிாி நீா் திறக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை இது தொடா்பான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தொியவில்லை என்று விவசாயிகள் வேதனை தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி