ஆப்நகரம்

காவிரி விவகாரம்; தேசியக்கொடி எரித்த ஆசிரியர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தேசியக் கொடி எரித்த பிரபுபதி என்ற தனியார் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 1 Apr 2018, 9:51 am
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தேசியக் கொடி எரித்த பிரபுபதி என்ற தனியார் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil flag burn


உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னையான காவிரி மேலாண்மை அமைக்காமல், மத்திய அரசு உள்ளதாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் பிரபுபதி என்பவர் மத்திய அரசைக் கண்டித்து தேசிய கொடி எரித்தார். மேலும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு தேசிய கொடியை எரித்ததுடன், அதை வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேசியக்கொடி எரித்ததாக பிரபுபதியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி