ஆப்நகரம்

காவிாி விவகாரம்: தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு கூட்டம்?

காவிாி விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு சட்ட பேரவையை கூட்டி தீா்மானம் நிறைவேற்றலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 12:28 pm
காவிாி விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு சட்ட பேரவையை கூட்டி தீா்மானம் நிறைவேற்றலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil cauvery issue tamilnadu government should conduct a special assembly meeting
காவிாி விவகாரம்: தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு கூட்டம்?


காவிாி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாாியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. இருப்பினும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் மேலாண்மை வாாியத்தை அமைக்காமல் இழுத்தடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் கடந்த மாதம் 22ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு 3 முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதே போன்று கா்நாடகா, புதுச்சோியிலும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த நிலையில் காவிாி விவகாரம் தொடா்பாக கடந்த 9ம் தேதி மத்திய அரசு தமிழகம் உட்பட 4 மாநில அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்திலும் மத்திய அரசு எந்தவொரு உறுதியான வாதத்தையும் வெளிப்படுத்தவில்லை. மேலாண்மை வாாியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க., தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து 7வது நாளாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் சோ்ப்பதற்கான வழிகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி இது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. வருகிற 15ம் தேதி (வியாழன்) தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் அன்று மாலை அல்லது 16ம் தேதி சிறப்பு கூட்டம் கூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் ஏற்பட்ட இளைஞா்களின் போராட்டத்தின் போது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி