ஆப்நகரம்

காவிரி விவகாரம்; டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத அதிமுக அரசைக் கலைக்க வலியுறுத்தி திருச்சியில் டிராஃபிக் ராமசாமி உண்ணாரவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Samayam Tamil 31 Mar 2018, 6:43 pm
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத அதிமுக அரசைக் கலைக்க வலியுறுத்தி திருச்சியில் டிராஃபிக் ராமசாமி உண்ணாரவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
Samayam Tamil Traffic Ramaswamy cauvery


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் இன்று காலை சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காவரி மேலாண்மை அமைக்கக் கோரியும், காவரி விவகாரதத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத அதிமுக அரசைக் கலைக்கக் கோரியும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அங்குள்ள உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்களும் வரத்துவங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துகு்கு விரைந்த போலீசார், டிராஃபிக் ராமசாமியை சமாதானம் செய்து அனுப்பினர்.

அடுத்த செய்தி