ஆப்நகரம்

ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் கைதாகி விடுதலை!

காவரி மேலாண்மை அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக ஸ்டாலின், காங்கிரஸ் திருநாவுக்கரசு உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.

Samayam Tamil 1 Apr 2018, 1:46 pm
காவரி மேலாண்மை அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக ஸ்டாலின், காங்கிரஸ் திருநாவுக்கரசு உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
Samayam Tamil dmk released


தமிழக வாழ்வாதார பிரச்னையான காவரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு தவறிய நிலையில், திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று நடந்தது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட், திராவிட கழகம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இந்த கூட்டம் முடிந்த பிறகு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வாசலில் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் செய்திகள் வந்தன.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை முடிவடிந்தையடுத்து, திமுக ஸ்டாலின், காங்கிரஸ் திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஸ்டாலின், வீரமணி, திருநாவுக்கரசு, முத்தரசன், உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்பு, சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


மக்களுக்கு இடையூராக போராட்டம் நடத்த வேண்டாம் என்றும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்திக் கொள்ளாலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி