ஆப்நகரம்

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதில், காவிரி மேற்பார்வை ஆணையம்!

காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 24 Mar 2018, 6:30 pm
காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil cauvery water


காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அந்த தீர்ப்பில், தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நீர் என்பதை வரையறுத்தியும், இதை உறுதி செய்யும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்கவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் விரைந்து அமைக்கக் கோரி, தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஒருமித்தக் குரலில் வலியுறுத்தி வருகின்றனர். ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதிலாக, காவிரி நீர்ப் பங்கீட்டை மேற்பார்வை செய்யும் ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த அமைப்புக்கு ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை தலைவராகவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் 4 பேரை உறுப்பினர்களாகவும் மத்திய அரசு நியமிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த காவிரி மேற்பார்வை அமைப்பு வாரியம் என்பது தமிழக மக்களை ஏமாற்றும் அமைப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி