ஆப்நகரம்

நீட் தேர்வு உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!

நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் வேண்டும் என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jul 2018, 1:44 pm
நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் வேண்டும் என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil நீட் தேர்வு உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!
நீட் தேர்வு உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!


இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அல்லாது, தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. பிற மொழி வினாத்தாள்களில் ஆங்கில மொழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

இதில், தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் பிழைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி., டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அந்த வழக்கில், 49 தவறான வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், தவறாக உள்ள 49 கேள்விகளுக்கும் மொத்தமாக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது. மேலும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்பதால், அதற்கு முன்பாகவே மனுதாரர் டி.கே.ரங்கராஜன் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நீட் கருணை மதிப்பெண் வழக்கு தொடர்பாக யார் மனு தாக்கல் செய்தாலும், மனுதாரரின் கருத்தை பெற்றுக்கொண்ட பின்புதான் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி