ஆப்நகரம்

கிசான் சம்மான் முறைகேடு...தகவல் தந்தால் சன்மானம்: சிபிசிஐடி அறிவிப்பு

கிசான் திட்ட முறைகேடு குறித்து புகார் அளிக்க, தொலைபேசி, வாட்ஸ்அப் எண்களை சிபிசிஐடி போலீசார் அளித்துள்ளனர்.

Samayam Tamil 19 Sep 2020, 8:36 am
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000ரூபாய் வழங்கும் திட்டமான, பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக 13 மாவட்டங்களில் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil cbcid board


இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அத்துடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணமும் திரும்ப பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிசான் திட்ட முறைகேடு குறித்து புகார் அளிக்க, தொலைபேசி, வாட்ஸ்அப் எண்களை சிபிசிஐடி போலீசார் அளித்துள்ளனர். இதன்வழியாக சரியான தகவல்களைத் தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் சிபிசிஐடி அறிவித்துள்ளது.




இதற்காக பிரத்யேக தொடர்பு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. உங்கள் புகார்கள/ தகவல்களை பதிவு செய்ய:
தொலைபேசி : 044 2851 3500
பேக்ஸ் : 044 2851 2510
வாட்ஸ் அப் : 94981 81035
இமெயில் : cbcid2020@gmail.com

அடுத்த செய்தி