ஆப்நகரம்

தாயும், தந்தையும் என்னை சித்ரவதை செய்கின்றனர் - சிபிசிஐடி ஆய்வாளர் மகள் அதிர்ச்சி புகார்!

தாய் தந்தையே தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி மகள் கேண்டி குற்றச்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 26 Apr 2019, 6:10 pm
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேண்டி. இவர் தனது சிபிசிஐடி தாய் விஜயலட்சுமி மற்றும் தந்தை மீது அதிர்ச்சிகர புகார் ஒன்றை அளித்துள்ளார்.
Samayam Tamil Candy Complaint


இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேண்டி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், என்னுடைய தாய் காவல் ஆய்வாளராக இருக்கிறார்.

அவரும், எனது தந்தையும் சேர்ந்து என்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பாரில் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர். மேலும் என்னை ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் வற்புறுத்தினர்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அவர்களிடம் இருந்து வெளியேறி, என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன்.

இந்நிலையில் கடந்த 23.04.2019 அன்று, எனது தாயும், தந்தையும் அடியாட்களுடன் வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து செல்ல முயன்றனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் என்னுடைய அண்ணியிடம் 10 லட்சம் பணமும், நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இவை அனைத்தும் என்னுடைய தாய் காவல் ஆய்வாளர் என்பதால், அவரை பற்றி எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், அதனை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளாமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர்.

என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர்களிடம் இருந்து என்னையும், எனது அண்ணனின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி