ஆப்நகரம்

குட்கா ஊழல் விவகாரத்தில் ஐந்தாவதாக சீனிவாச ராவை கைது செய்தது சிபிஐ!

குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவை, சிபிஐ ஐந்தாவதாக கைது செய்துள்ளது.

Samayam Tamil 6 Sep 2018, 6:00 pm
சென்னை: குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவை, சிபிஐ ஐந்தாவதாக கைது செய்துள்ளது.
Samayam Tamil Gutkha Scam


தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ நடத்தும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்கள் அடங்கும். இதில் பல்வேறு ஆவணங்களைக் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், கலா வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஐந்தாவதாக குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவ், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேருக்கும் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

CBI arrests another director of MDM tobacco company V srinivasa rao in Gutkha Scam.

அடுத்த செய்தி