ஆப்நகரம்

கேபிள் வாங்கியதில் ரூ. 5 கோடி மோசடி; ரயில்வே அதிகாரி மீது சிபிஐ வழக்கு

நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிள் பெறப்பட்டதில் 5.4 கோடி ரூபாய் ஊழல் செயத்தாக ரயில்வே அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TOI Contributor 27 Dec 2017, 8:38 pm
நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிள் பெறப்பட்டதில் 5.4 கோடி ரூபாய் ஊழல் செயத்தாக ரயில்வே அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil cbi books rdso official after southern railway uncovers rs 5crore scam
கேபிள் வாங்கியதில் ரூ. 5 கோடி மோசடி; ரயில்வே அதிகாரி மீது சிபிஐ வழக்கு


இரயில் நிலையங்களுக்கிடையே தகவல் தொலைத்தொடர்புக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிளை தெற்கு ரயில்வே வாங்கியது.

இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜீ கே் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு 280.1 கிமீ நீளத்திற்கு கேபிள் வாங்கினர்.

இதையடுத்து, 2017 ஜீலையில், கேபிள் நீளத்தை ஆராயந்து பார்த்த போது 280.1 கிமீ நீளத்திற்கு பதிலாக 277.6 நீளம் மட்டுமே இருந்ததை ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து நடத்திய விசாரணையில், கேபிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட ரயில்வே மூத்த அதிகாரி எம்.கே. சிங் கேபிளின் நீளம் சரியாக இருப்பதாக கணக்கு காண்பித்ததும், தரம் குறைந்த கேபிளை வாங்கியும், 5.43 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிள் பெறப்பட்டதில் 5.4 கோடி ரூபாய் ஊழல் செயத்தாக ரயில்வே அதிகாரி எம்.கே சிங் மற்றும் கேபிள் நிறுவனத்தார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி