ஆப்நகரம்

தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு: நாளை முதல் சாட்டையை சுழற்றவுள்ள சிபிஐ!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நாளை முதல் விசாரணை தொடங்கவுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2020, 5:04 pm
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்ஃபோன் கடை வைத்திகுந்த தந்தை. மகன் போலீசில் காவலில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil sathakulam


இந்த கொடூர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவி்த்திருந்தார்

ஆனால், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை, ஒரு நொடி கூட தாமதிக்காமல் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் கோரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மனு

இதையடுத்து, இவ்வழக்கில் விறுவிறு விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், தலைமறைவாக இருந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை ஒரே இரவில் வேட்டையாடி பிடித்தது. இந்த மரண வழக்கு தொடர்பாக இதுவரை 10 போலீசாரை கைது செய்துள்ள சிபிசிஐடி, நீதிமன்ற காவலில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்கவுள்ளதாக சிபிஐ இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்காக சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் 7 அதிகாரிகள் டெல்லியிலிருந்து நாளை சாத்தான் குளம் வரவுள்ளனர் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாத்தான்குளம் கைதிகள் சிறையில், நீதிபதி திடீர் ஆய்வு... பெரும் பரபரப்பு!

முன்னதாக, இந்தச் சம்பவத்தை தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை. வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கைகளை சிபிஐ முன்னெடுக்க வேண்டும் என்றும், விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி