ஆப்நகரம்

டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்கள்: அரசு முடிவு!

டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, சிசிடிவி கேமிராக்களை பொருத்த அனுமதி அளித்துள்ளது

Samayam Tamil 26 Jun 2020, 3:24 pm
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது போதைக்கு அடிமையாக்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு தனது டாஸ்மாக் நிறுவனம் மூலம் 2019-20ஆம் நிதியாண்டில் ரு.30,000 கோடி ஈட்டியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

டாஸ்மாக் கடைகளின் மூலம் இவ்வளவு வருவாய் வந்தாலும், தரமான சரக்குகள் விற்பனை செய்யப்படுவதில்லை. பாட்டில்களின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் விலையை விட அதிகமான விலைக்கு மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அரசு அதனை கண்டுகொள்வதில்லை. பல சமயங்களில் திருட்டு சம்பவங்களும், பிளாக்கில் விற்பனை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

“போலீசா?, அப்ப பால் கிடையாது” பால் முகவர்கள் திட்டவட்டம்!

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடைக்கு இரண்டு கேமிராக்கள் வீதம் 3,000 கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 535 கடைகளுக்கும், கோவை மண்டலத்தில் 450 கடைகளுக்கும், மதுரை மண்டலத்தில் 755 கடைகளுக்கும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் சிசிடிவி


டாஸ்மாக் சிசிடிவி


இது தொடர்பான உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிறப்பித்துள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், மேற்கண்ட வகைகளில் வரும் கடைகளை பட்டியலிட்டு அனுப்புமாறும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி