ஆப்நகரம்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு பிரபலங்கள் வாழ்த்து!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவான் கலந்துக் கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 29 Aug 2019, 12:44 pm
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு பிரபலங்கள் வாழ்த்து!
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு பிரபலங்கள் வாழ்த்து!


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று உள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவான் கலந்துக் கொண்டு, 251.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும்: பாகிஸ்தான் அமைச்சர் திட்டவட்டம்!!

இதையடுத்து இளவேனிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



ஒதுக்கப்படும் ‘தல’ தோனி...: தென் ஆப்ரிக்க ‘டி-20’யில் பந்த்துக்கு வாய்ப்பு!



முன்னதாக உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.

அந்த நேரத்தில் இவரு மட்டும் இருந்திருந்தா... ஸ்டோக்ஸ் அதிரடிக்கு... பாண்டிங் தீர்வு!

முன்னதாக, இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.

கடலூரில் பிறந்த இளவேனில், தனது பெற்றோருடன் அஹமதாபாத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி