ஆப்நகரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை!!

மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு குறித்த மனுவை விசாரித்த, மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போல் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது

Samayam Tamil 9 Feb 2018, 1:19 pm
மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு குறித்த மனுவை விசாரித்த, மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போல் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது.
Samayam Tamil cell phones are banned from madurai meenatchi amman temple madurai high court bench
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை!!


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், இனி மீனாட்சி அம்மன் கோவில்களில் கோவில் மற்றும் அரசு அதிகாரிகள், பாதுகாவலர்கள் ஆகியோரை தவிர்த்து மற்றவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர்.

மேலும், கோவிலில் தீயணைப்புக் கருவிகள் எப்போதும் இருக்க வேண்டும். கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக அரசு மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியைப் பெற வேண்டும் போன்ற பரிந்துரைகளை உயர்நீதிமன்றக் கிளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி