ஆப்நகரம்

இனிமேல் கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது: உ.பி. யில் அதிரடி உத்தரவு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதற்கு அதிரடியாக தடை விதித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 7:39 pm
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்விச்சூழலை மேம்படுத்தும் விதமாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதற்கு அதிரடியாக தடை விதித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil cellphones are prohibited inside college premises in up
இனிமேல் கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது: உ.பி. யில் அதிரடி உத்தரவு


மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கும், கவனச்சிதறலை குறைப்பதற்கும் செல்போன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில உயர்கல்வித் துறை இயக்குநரகம் அம்மாநில கல்வி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மட்டுமில்லாமல் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்தடை உத்தரவு அமல்படுத்தப் படுவதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஏற்கனவே உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது அரசு கூட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் கூட செல்போன் பயன்படுத்த தடை விதித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி