ஆப்நகரம்

நிதி ஒதுக்கியாச்சு... அப்புறம் என்ன சீக்கிரமா பூமி பூஜை போட்டுட வேண்டியதுதான் !!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு, முதல்கட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Samayam Tamil 3 Dec 2019, 6:46 pm
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு, முதல்கட்டமாக 137.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.
Samayam Tamil gmc


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்துடன், மேலும் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் இக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் உள்ளிடவற்றுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் 3 புதிய மருத்துவக்கல்லூரிகள்.. தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயரும்..

அதன்படி, மாநில அரசு தமக்கான நிதியை ஒதுக்கி, அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஆறு மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானத்துக்கு, முதல்கட்டமாக 137.6 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளை தொடர்ந்து கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய இடங்களில் புதிதாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த புதன்கிழமை (நவம்பர் 27) அறிவித்திருந்தது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும்.

இதன் பயனாக, சுமார் 1,500 எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி