ஆப்நகரம்

ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாட்டைத் தாக்கிய ஓகி புயலைத் தேசிய பேரிடராக அறிவிக்க தமிழக அரசு அளித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்

TNN 10 Dec 2017, 6:23 am
தமிழ்நாட்டைத் தாக்கிய ஓகி புயலைத் தேசிய பேரிடராக அறிவிக்க தமிழக அரசு அளித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil central government gave nods to announce ockhi cyclone as national disaster
ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்!


கடந்த சில தினங்களுக்கு கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களை ஓகி புயல் தாக்கியது. இதில் பல மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல மீனவர்கள் கடலில் மாயமாகி உள்ளனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்நிலையில், அதிமுக எம்பியும் மாநிலங்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமானைச் சந்தித்து, கடலில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை துரிதப் படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் கோரிக்கைக்கு ஏற்று, ஓகி புயலைத் தேசிய பேரிடராக அறிவிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதியளித்ததாக கூறினார்.

அடுத்த செய்தி