ஆப்நகரம்

அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு ஆபத்து: வைகோ ஆருடம்!!

சட்டமன்றத்தில் மேகதாட்டு அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை அனுப்புவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது மன்னிக்க முடியாத தமிழகத்திற்கு இழைக்கப்படும் கேடாகும் என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Dec 2018, 5:13 pm
அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவருவதன் மூலம் தமிழகத்திற்கு பேராபத்து உள்ளது. அணை குறித்து முழு அதிகாரமும் அந்த மாநிலத்திற்கு போய்விடும். இந்த விஷயத்தில் இந்தியாவிலேயே பாதிக்கப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடாக இருக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ எச்சரித்துள்ளார்.
Samayam Tamil central government has deceived the tamil nadu by giving permission to construct the dam across mekedatu
அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு ஆபத்து: வைகோ ஆருடம்!!


மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், ''கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விவசாயம் அழிந்து, லட்சம் விவசாயக் குடும்பங்கள் அடியோடு அழிந்து விட்டன.

இதற்கு குறைந்தபட்சம் 25,000 கோடியாவது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருந்த நிலையில், வெறும் 353 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இன்னொரு பக்கத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற கேஸ்கள் எடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எங்கள் மாநிலத்தில் எங்கள் மலைகளுக்கு மத்தியில் நாங்கள் அணை கட்டுவதை யார் தடுக்க முடியும் என்று கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது மேகதாட்டு அணையை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடுத்தால் நமக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும். தடுக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அணை கட்டுவதற்கு ஆயத்தமாகி நல்ல நாட்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அணை கட்டுவதன் மூலம் 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது ஸ்டெர்லைட் குழுமம் 100 கோடி மதிப்பில் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறோம் என்று கூறி வருகின்றனர். ஸ்டெர்லைட் வேதாந்தா குடும்பத்திற்கு 2 ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை தற்போது மத்திய அரசு கொடுத்துள்ளது.

அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவருவதன் மூலம் தமிழகத்திற்கு பேராபத்து உள்ளது. அணை குறித்து முழு அதிகாரமும் அந்த மாநிலத்திற்கு போய்விடும். இந்த விஷயத்தில் இந்தியாவிலேயே பாதிக்கப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடாக இருக்கும்.

முல்லைப் பெரியாரில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் நடுவர் மன்ற தீர்ப்பு இருக்கும்போதே புதிய அணை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது இந்த அணை பாதுகாப்பு மசோதா வருவதன் மூலம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களும் அணைகளை கட்டி தண்ணீர் திறந்து விட மாட்டார்கள்.

அணை பாதுகாப்பு மசோதா வருவதன் மூலம் ரஷ்யாவில் நடந்தது போல் இந்தியாவிலும் நடக்கும். ஒரு மாநிலமும் ஒன்றாக இருக்காது. பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் அதன் சத்துக்கள் பல அடியோடு அளிக்கப்படும்.

ராமர் கோயில் கட்டப்படும் என்று கூறி வருகின்றனர். ஒரு ரத்தக்களரி ஏற்படுத்த நினைக்கின்றனர். எந்த ஒரு பாசிசவாதியும் அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள். ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வர். நம்ம பிரதமர் பாசிஸ்ட் ஆக மாறி வருகிறார்'' என்றார்.

அடுத்த செய்தி