ஆப்நகரம்

“முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தை உறுதிசெய்யவேண்டும்” : சசிகலா புஷ்பா

“முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தை உறுதிசெய்யவேண்டும்” : சசிகலா புஷ்பா

TOI Contributor 9 Oct 2016, 12:27 am
தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் எழுதும் கடிதங்களில் உள்ள கையெழுத்து அவருடையது தானா என்பதை உறுதி செய்யவேண்டும் என்று ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil central government should ensure jayalalithas signature in her letters which sent to prime minister says sasikala pushpa
“முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தை உறுதிசெய்யவேண்டும்” : சசிகலா புஷ்பா


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவமனையில் இருந்தபடி அரசு அலுவல்களை கவனித்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் உடல் நலம் பெற்று விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம், என் விருப்பமும் கூட. ஆனால் தமிழக மக்களுக்கு முதலமைச்சரின் உடல்நலத்தை வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதுவதாக செய்தி வெளியாகிறது. பிரதமருக்கு எழுதும் கடிதம் மற்றும் அரசின் கோப்புகளில் உள்ள முதலமைச்சரின் கையெழுத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார். அவ்வாறு கடிதத்தில் உள்ள கையெழுத்து உறுதிசெய்யப்பட்ட பின்னரே கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Central government should ensure jayalalitha’s signature in her letters which sent to prime minister says sasikala pushpa

அடுத்த செய்தி