ஆப்நகரம்

தமிழகத்தில் தளர்த்தப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்- மாநில அரசு முக்கியத் தகவல்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் எவ்வாறு தளர்த்தப்படும் என்பது பற்றி தமிழக அரசு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 19 Apr 2020, 9:53 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 19 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் ஊரடங்கு


அதன்படி வரும் 20ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட தொழிற்சாலைகள், வணிக நிறுவங்கள், இதர சேவைகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட்-19ல் இருந்து மீள்கிறதா தமிழகம்?- பாதிப்பின் சமீபத்திய நிலவரம்!

அதில் மத்திய அரசு கடந்த 15ஆம் தேதி அன்று ஆணை ஒன்று வெளியிட்டது. அதன்படி வரும் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக மாநில அரசு சார்பில் ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு தனது முதல்கட்ட கூட்டத்தை நடத்தி அதன் ஆலோசனைகளை முதலமைச்சர் பழனிசாமியிடம் வரும் 20ஆம் தேதி தெரிவிக்க உள்ளது.

அவற்றை ஆராய்ந்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுப்பார். எனவே இதுகுறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை மத்திய அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி