ஆப்நகரம்

ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட முடிவு; வேலையிழக்கும் 2,200 பேர்!

ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 30 Jan 2018, 12:12 pm
சென்னை: ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil central govt plans to close avadi ordnance clothing factory
ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட முடிவு; வேலையிழக்கும் 2,200 பேர்!


சென்னையில் ராணுவ வீரர்களுக்கான சீருடை தயாரிக்கும் தொழிற்சாலை, கடந்த 1961ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இங்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் சீருடைகள், சுவட்டர், போன்ற ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆலையை மூட மத்திய அரசு திடீரென முடிவு செய்துள்ளது.

இதனால் அங்கு பணிபுரியும் 2200 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள், கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனம், அச்சகங்கள், மீன் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

இதற்கு தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Central Govt plans to close Avadi Ordnance Clothing Factory.

அடுத்த செய்தி