ஆப்நகரம்

தி.மு.க. கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா: பொன்.ராதாகிருஷ்ணன்!

வரும் மக்களவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி குறித்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 3 Mar 2019, 3:58 pm
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்துவரும் பி.ஆர். பாண்டியன் அரசியல் பின்புலம் உடையவர்.
Samayam Tamil central minister pon radhakrishnan criticizes dmk alliance in upcoming election
தி.மு.க. கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா: பொன்.ராதாகிருஷ்ணன்!


விவசாயிகளின் தலைவராக அல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஐ.ஜே.கே. கட்சி ஆனது, தி.மு.க.வில் இணைந்திருப்பதால் பா.ஜ.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாரிவேந்தர் மட்டுமல்ல, எவர் எங்கு சென்றாலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரம்மாண்டம் போல காட்சிதரும் தி.மு.க. கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டுவது சரியல்ல. தெரிய வேண்டிய அனைவருக்கும் அது தெரிந்துள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தை பா.ஜ.க. அரசியல் செய்வதாக கூறுவது சரியல்ல.

பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் கிடைத்த வெற்றியை அறிவிக்கும் கடமை பிரதமருக்கு உள்ளது. வெற்றியை கொண்டாடும் முதல் கடமை பிரதமருக்கும், இரண்டாவது கடமை எதிர்கட்சியின் கடமை, மூன்றாவது அனைத்து கட்சி தலைவர்களின் கடமை, நான்காவது அனைத்து மக்களின் கடமை என்றார்.

அடுத்த செய்தி