ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டத்திற்கு வாய் திறக்காத அமைச்சர், இளையராஜா சர்ச்சைக்கு வாய் திறக்கிறார்!

விவசாயிகள் போராட்டத்திற்கு வாய் திறக்காத அமைச்சர், இளையராஜா சர்ச்சைக்கு வாய் திறக்கிறார்!

TOI Contributor 20 Mar 2017, 8:18 pm
தலைநகர் டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருவதை கண்டுகொள்ளாத மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இளையராஜா காப்புரிமை பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil central minister venkaiya naidu statement about ilayaraja issue
விவசாயிகள் போராட்டத்திற்கு வாய் திறக்காத அமைச்சர், இளையராஜா சர்ச்சைக்கு வாய் திறக்கிறார்!


இளையராஜா – எஸ்பிபி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இனி கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை என்று எஸ்பிபி அறிவித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். அதில், இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனை பேசி நல்ல விதமாக சரிசெய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏழு நாட்களாக விவசாயிகள் குளிரிலும், வெய்யிலிலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வந்த போது வாய் திறக்காத வெங்கையா நாயுடு, இளையராஜா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்து இருப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி