ஆப்நகரம்

முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை

வர்தா புயல் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

TNN 28 Dec 2016, 10:35 am
சென்னை: வர்தா புயல் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil central team held meeting with cm panneer selvam at secretariat
முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை


வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மத்தியக் குழு இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவின் வசிஷ்டா தலைமையில் 9 பேர் அடங்கிய மத்தியக் குழு நேற்று இரவு சென்னை வந்தடைந்தது.

சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள மத்தியக் குழு, தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பனகல் பார்க், அண்ணா வளைவு, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிண்டி செல்லும் மத்தியக் குழு, அங்கு மின் கட்டமைப்பு, புயலால் சேதமடைந்த மின் இணைப்புகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். தன பிறகு வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட சேதம் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.

இத்ய்போல், நாளை ராயபுரம் சென்று, கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட சேதம், கள்ளுக்கடைமேட்டில் பாதிக்கபப்ட்ட குடிசைகளை பார்வையிடுகின்றனர். மேலும், சின்னாம்பேடு பகுதியில் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்கள், வாழை, மாமரம் ஆகியவற்றையும் பார்வையிடுகின்றனர்.

The nine-member Central team, led by Praveen Vashista, joint secretary, Ministry of Home Affairs, arrived at chennai late night. The team held a meeting with Chief Minister O Panneerselvam, Chief Secretary Girija Vaidyanathan and senior officials of various departments at the Secretariat this morning. They will commence their visit to the three districts - Chennai, Tiruvallur and Kancheepuram, severely affected by cyclone Vardah, from today.

அடுத்த செய்தி