ஆப்நகரம்

ஓகிபுயல்: ஒரு மாதத்திற்குப்பின் பாதிப்புகளை பார்வையிட வருகிறது மத்திய குழு!

கடந்த சில வாரங்களுக்கு தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களைத் தாக்கிய ஓகி புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது

TNN 26 Dec 2017, 12:07 pm
கடந்த சில வாரங்களுக்கு தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களைத் தாக்கிய ஓகி புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது.
Samayam Tamil central team is visiting tamil nadu to inspect the ockhi cyclone affected areas
ஓகிபுயல்: ஒரு மாதத்திற்குப்பின் பாதிப்புகளை பார்வையிட வருகிறது மத்திய குழு!


சில வாரங்களுக்கு முன், வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை பதம் பார்த்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிப்படைந்தது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தது.

இதனையடுத்து, ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று மத்திய அரசின் குழு ஒன்று தமிழகம் வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின், மத்திய அரசிற்கு இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நிவாரணத் தொகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி