ஆப்நகரம்

வர்தா புயல்: மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வருகை

வர்தா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வரவுள்ளது.

TNN 18 Dec 2016, 7:44 pm
சென்னை: வர்தா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வரவுள்ளது.
Samayam Tamil central team to visit tamil nadu next week to assess cyclone damage
வர்தா புயல்: மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வருகை


சென்னையில் கோர தாண்டவம் ஆடிய வர்தா புயல் சீற்றத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகின. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஆயிரக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்கடத்தி கோபுரங்கள் சாய்ந்து விழுந்து மின்வெட்டு ஏற்பட்டது. கேபிள் டிவி வயர்களும், மின் வயர்களும், தொலைபேசி வயர்களும் அறுந்து விழுந்ததில் தொலைதொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

கட்டங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் விழுந்ததால் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. அதேபோல், புயலில் சிக்கி சுமார் 20 மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

'வார்தா' புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், நாளை தில்லிக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், பிரதமரிடம் நிவாரண நிதி கோரவுள்ளார்.

முன்னதாக, வர்தா புயல் காரணமாக சேதமடைந்த தமிழகப் பகுதிகளை சீரமைக்க, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, தமிழக அரசுக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும். சேத விவரங்கள் முழுமையான ஆய்வுக்கு பின்னர் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என பிரதமர் மோடிக்கு எழுந்தியிருந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வார்தா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகத்திற்கு வர உள்ளது. மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் பிரவீன் வசிஷ்டா தலைமையில், நிதி, ஊரக வளர்ச்சி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர். இக்குழு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கலில் விரிவான ஆய்வு செய்யும் என தெரிகிறது.
Central team to visit Tamil Nadu next week to assess cyclone damage

அடுத்த செய்தி