ஆப்நகரம்

தஞ்சை, திருவாரூரில் மத்தியக் குழு; கஜா புயல் சேதம் குறித்து இன்று ஆய்வு!

தஞ்சை: புயல் பாதித்த பகுதிகளில் சேத விவரங்கள் குறித்து மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது.

Samayam Tamil 25 Nov 2018, 10:37 am
தென் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகின.
Samayam Tamil Central Team


லட்சக்கணக்கான மரங்களும், வீடுகளும் சேதமடைந்துள்ளன. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநில அரசும், தன்னார்வ குழுக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். தங்களின் 10 ஆண்டுகால உழைப்பு முற்றிலும் வீணாகிப் போனதாக மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் ஆய்வுக்குழு புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது. மிக மோசமான பாதிப்பைச் சந்தித்த டெல்டா மாவட்டங்களில் பார்வையிட்டு வருகின்றனர்.

நேற்று புதுகோட்டையில் மத்தியக் குழு ஆய்வு செய்தது. வயல் வெளிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களைக் கேட்டறிந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது.

அடுத்த செய்தி