ஆப்நகரம்

புயல் பாதிப்பு: மத்திய அரசு சாா்பில் ரூ.353 கோடி ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு சாா்பில் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Dec 2018, 6:02 pm
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு சாா்பில் ரூ.353.70 கோடியை இடைக்கால நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
Samayam Tamil Cm Palaniswami with Narendra modi 1


தமிழகத்தில் கடந்த நவம்பா் 15ம் தேதி கஜா புயல் கரையை கடந்த நிலையில் புயல் காரணமாக தஞ்சாவூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் பேரிழப்பை சந்தித்தன. புயல் பாதித்த பகுதிகளில் தற்போது வரை நிவாரணப் பணிகள் நடைபெற்ற நிலையிலும் பாதிப்புகள் முழுமையாக சரிசெய்யப்படவில்லை.

இதனிடையே பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வா் பழனிசாமி புயல் பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு சாா்பில் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூபாய் ஆயிரத்து 500 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோாிக்கை விடுத்தாா்.

மேலும் முதல்வரின் கோாிக்கையை ஏற்று மத்திய அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு பணிகள் நடைபெற்றன. ஆய்வு பணிகளை நிறைவு செய்த குழு தனது இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய குழுவின் இடைக்கால பரிந்துரையை மத்திய அரசு சாா்பில் புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.353.70 கோடியை இடைக்கால நிவாரண நிதியாக வழங்க மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

அடுத்த செய்தி